திங்கள், 27 நவம்பர், 2017

மெல்லக் கற்போருக்கான செயல்திட்டம் – சமூக அறிவியல்




மெல்லக் கற்போருக்கான செயல்திட்டம் – சமூக அறிவியல்




அரசு மேல்நிலைப்பள்ளி, காட்டூர் – 610104, திருவாரூர் – மாவட்டம்.

 
  1. 2017 – 2018 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு ‘ஆ’ பிரிவில் மெல்லக் கற்போர் 6 பேர் இனங்காணப் பட்டனர்.
  2. இவர்கள் அனைவருக்கும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் (RMSA) மெல்லக் கற்போருக்குக்கான (SLAP) கையேடுகள் வழங்கப்பட்டன.
  3. இவர்களில் ஒருவரைத் தவிர எஞ்சிய ஐவரும் மதிய உணவிற்கு வீடுகளுக்குச் செல்கின்றனர்.
  4. இந்த ஐவரும் மதிய உணவு எடுத்துவர அல்லது சத்துணவு சாப்பிட கேட்டுக் கொள்ளப் பட்டது.
  5. மதிய உணவு இடைவேளையில் சுமார் 15 நிமிடங்கள் ஒதுக்கி அதில் சமூக அறிவியல் கட்டங்களிலிருந்து சில பகுதிகளை தினமும் படிக்க, எழுத ஆலோசனை வழங்கப் பட்டது.
  6. இந்த 6 பேருக்கும் படிப்பது தொடர்பான ஆலோசனைகள் வழங்க அவர்களது விருப்பத்தின் பேரில் நன்றாக படிக்கும் மாணவர்கள் வழிகாட்டுநர்களாக நியமிக்கப்பட்டனர்.
  7. எழுத, படிக்க வாய்ப்புள்ள உரிய தருணங்களில் குழுக் கற்றல்.
  8. இவர்களது வருகைப் பதிவு குறைவாக உள்ளது. தினசரி வருகைப்பதிவையும் சிறப்பு வகுப்பில் பங்கேற்பதையும் உறுதி செய்தல். 
  9. வெள்ளி காலை, மாலை சமூக அறிவியல் சிறப்பு வகுப்புகளில் இவர்களுக்குத் தனிக்கவனம்.
  10. ஆசிரியர் இல்லாத பதிலிப் பாடவேளைகள் மற்றும் விடுமுறை நாள்களில் இவர்களது விருப்பத்தையொட்டி சிறப்பு வகுப்புகள் மற்றும் பயிற்சியளித்தல்
     
மு.சிவகுருநாதன், சமூக அறிவியல் பாட ஆசிரியர்
அ.மே.நி.ப., காட்டூர் – 610104.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக