செவ்வாய், 5 செப்டம்பர், 2017

ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) 2017

ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) 2017
                மு.சிவகுருநாதன்


         ஊரகத் திறனாய்வுத் தேர்வு அழைக்கப்படும் இந்தத் தேர்வு, கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. டிரஸ்ட் (TRUST) தேர்வு எனப்படும் இத்தேர்வை 9ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவ, மாணவிகள் எழுதலாம்.

      ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவர்களும், 50 மாணவிகளும் தேர்வு செய்யப் படுகிறார்கள். அவர்கள் +2 படிக்கும் வரை ஆண்டுக்கு ரூ.1,000 என நான்கு ஆண்டுகளுக்கு ரூ. 4000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.


      1990 லிருந்து 27 ஆண்டுக்களாக இந்தத் தொகை உயர்த்தப்படவில்லை. இதனால் இத்தேர்வுகளில் பங்கு பெறுவோரின் ஆர்வம் குறைந்துள்ளது. இதை உயர்த்தி கணிசமாக தொகையையை வழங்குவதே பொருத்தமாக இருக்க முடியும். பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு ரூ. 15000 லிருந்து ஒரு லட்சமாக உயர்ந்துள்ளது.


    எட்டாம் வகுப்பில் 50% மதிப்பெண்கள் பெற்றவர்கள் இத்தேர்வை எழுத முடியும். ஊரகப் பள்ளி மாணவர்கள் மட்டுமே இத்தேர்வில் பங்கு பெறமுடியும். பெற்றோரின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும்.


     மொழிப்பாடங்கள் தவிர்த்து எட்டாம் வகுப்புப் பாடங்களிலிருந்து 100 சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் வினாக்கள் மட்டுமே கேட்கப்படும். OMR தாளில் வட்டமிட்ட A, B, C, D ஐ பால்பாயிண்ட் பேனாவால் நிழலிட்டுக் (shading) காட்டவேண்டும்.



      கணிதவியல், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடத்திலிருந்து தலா 25 மதிபெண்களும் மனத்திறன் தேர்வுக்கு 25 மதிப்பெண்கள் என மொத்தம் 100 மதிபெண்கள். தேர்வு நேரம் 2.30 மணி. மனத்திறன் வினாக்கள் 8, 10 ஆம் வகுப்புகளுக்கு நடைபெறும் திறனாய்வுத் தேர்வுகளை ஒப்பிடுகையில் மிகவும் எளிமையானவை.
 
 
    தேர்வு 24.09.2017 ஞாயிறு அன்று நடைபெறுகிறது. இவ்வாண்டு எங்கள் பள்ளியிலிருந்து 5 மாணவிகள் சார்பில் விண்ணப்பிக்கப் பட்டுள்ளது. அவர்களது பெயர்கள் பின்வருமாறு:
 
  • பெனாசீர் பேகம் மு
  • கோபிகா செ
  • நிர்மலா அ
  • சுவலெட்சுமி ஶ்ரீ
  • சுவிதா ஆ


     அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம் (RMSA) சார்பில் விடுமுறை நாள்களில் திறனாய்வுத் தேர்வுகளுக்காக விடுமுறை நாள்களில் பயிற்சியளிக்கப்படுகிறது. திருவாரூருக்கான பயிற்சி மையம் புலிவலம் அரசு மேனிலைப் பள்ளியில் செயல்படுகிறது. இங்கு 100 மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மன்னார்குடியிலும் 100 பேருக்கான ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
 
 
     இதில் NMMS, TRUST, NTSE ஆகிய தேர்வுகளில் பங்கேற்கும் பள்ளிக்கு ஒரு மாணவர் மட்டுமே கலந்துகொள்ள முடியும். எனவே எம்பள்ளியில் தேர்வு எழுதும் 5 மாணவர்களுக்கும் 2015, 2016 ஆகிய ஆண்டுகள் நடைபெற்ற வினாத்தாள்கள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் வழங்கி, தேர்வை சிறப்பான வகையில் எதிர்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. NMMS, NTSE தேர்வுகள் குறித்து பின்னர் பதிவிடப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக